வெள்ளி, 20 நவம்பர், 2009

உள்ளுறை மூன்றாவது இதழ்

இதழ் மூன்று - நவம்பர்- டிசம்பர் 2009

கட்டுரை: கவிதையின் மைய்மை - மைக்கேல் ஹம்பர்கர்

கவிதைகள்: சங்கர ராம சுப்ரமணியன், ஆர்.கே. , மோகன ரவிச்சந்திரன், பொன்.வாசுதேவன், எ.தேவராஜன் (மலேசியா), வீ.சுரேஷ்குமார்,
சுகந்தி சுப்ரமணியன், புதுமைபித்தன், திருவள்ளுவர், சங்க கவிதை

டிஎஸ்.எலியட்: பாழ் நிலம்

திசை நான்கு: யுதிஷ்ட்ரன்

இதுவரை வெளிவந்த இரு இதழ்களும் சீரிய வாசகர்களுக்கு பெரிதும் நிறைவை தந்துள்ளன என இதழுக்கு வந்த எதிர்வினைகளால் அறிய முடிகிறது.
இந்த மூன்றாம் இதழும் தேர்ந்த விசயங்களுடன் வெளிவருகிறது. கவிதையியல் பற்றிய மொழி பெயர்ப்பு கட்டுரைகளை வரவேற்கிறோம். தரமும் புதுமையும் ஆழமும் கவிதையின் தர்க்கப் பொருத்தமும் கொண்ட கவிதைகளே இதழில் பிரசுரமாகின்றன. தமது சிறந்த கவிதைகளை அனுப்பி இதழின் பரிமாணத்தை விரிவாக்க கவிஞர்களை அழைக்கிறோம். கவிதை நூல்கள் பற்றிய விமர்சனமும் கவிதை அமர்வுகள் பற்றிய தகவல் விமர்சனமும் வரவேற்கபடுகின்றன.