வெள்ளி, 28 மே, 2021

புனைவை விலக்கிய கவிதை - நோவா ஃபால்க்

  

நாம் அதிக நற்பேறுமிக்க காலகட்டங்களில் வாழ்கிறோம்.

யாரைக் குறை சொல்வது?

வங்கிக் கொள்ளையை கவனிக்கத் தவறியபடி

அலங்கரிகரிக்கப்பட்ட ஜன்னலில்

நகரும் நான்கு பருவங்கள் போல நம் மனநிலைகள்.

ஒவ்வொருவரும் கேபிள் தொலைக்காட்சி மீது,

தோல்வார்களின் மீது,

நமது ஒப்பாரிகளாக மாறும் குறுகிய திறப்பு இயந்திரங்களின் மீது

குழந்தைகளை வளர்க்கிறோம்.

பள்ளி, கல்லூரிகளில்,

இரங்கல் செய்திகளை வாசிக்கும் வாயில் முகப்புகளில்

மற்றவரின் வாழ்க்கையை வாழ்கிறோம்.

சவரம் செய்யும் போது,

பல் துலக்கும்போது,

எப்போதும் வளர்ந்து கொண்டிருப்பதாக நினைக்கும்

ஏதாவது ஒன்றைப் பிடுங்கி வீசும் போது

உன்னை நான் தவற விடுகிறேன்

என்று கண்ணாடி முன் நின்று சொல்கிறோம்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக