வெள்ளி, 28 மே, 2021

கலிலியோ - பால் ட்ரான்

  

அந்தக் கடிகாரத்தை அப்புறப்படுத்திவிட்டால்

காலத்தை நிறுத்திவிட முடியும் என்று நினைத்தேன்

நிமிடக் கரம். மணிக்கரம்.

 

எதுவும் ஒன்றும் செய்ய முடியாது.

எதுவும் நிற்கவில்லை.

பின் தொடர மட்டும் முடிந்தது.

 

கடக்கும் நொடிகள் மனதாக இல்லாத

மனதின் இடிமழையில் இறந்த கன்றுகளைப் போலக்

குவிந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

 

சிதைக்கப்பட்ட சுயத்தின் வரையறையுடன்

அகராதியிலிருந்து ஒரு பக்கம் கிழிந்தது.

என்னால் அதை எதிர்கொள்ள முடியவில்லை.

 

எதுவும் நிகழாதது போல் உலகம் ஓடிக்கொண்டிருக்கிறது.

 

அனைவரும் துயில் கலைந்து எழுந்தது தெரிகிறது

உடை உடுத்தினார்கள்; பணிக்குச் சென்றார்கள்;

வீட்டிற்குச் சென்றார்கள்.

 

விருந்து நிகழ்ச்சிகளும் இருந்தன. பரவசம்.

மதுபோதை. ஒருவருக்கொருவர் இணைநடனம்.

அப்பட்டம்.

*

"கவிதை ஒரு வெளிப்பாடு அல்ல என்பதை நான் நம்புகிறேன். பெண்டுலங்கள் காலத்தை அளவிடும் என கலிலியோ கண்டுபிடித்ததைப் போல, கண்டுபிடிப்பின் மூலம் உருப்பெற்ற கிளர்ச்சிமிக்க உள்ளார்ந்த ஒரு செயல்தான் கவிதை. இந்தக் கவிதையில், வன்செயல் விளைவுடன் முரண்படும் ஒரு பிரதிநிதியின் சுயசரிதை உண்மை பார்வையிலிருந்து வெகுதொலைவில் காட்சிக்கு அப்பால் உள்ளது. காலமாக இல்லாத, ஆனால் அனைத்தும் "பிளவுபடுத்தப்பட வேண்டும், பயனற்றதாக்கப்பட வேண்டும்" என்ற வெறி கொண்ட கண்டுபிடித்தல் என்பது, சொற்றொடரிலிருந்து சிதைவு வரை இந்தக் கவிதை எவ்வாறு ஊசலாடுகிறது என்பதன் வழியாக நிகழ்த்தப்படுகிறது. இறுதியில், ஒரு கடிகாரத்தின் பாகங்கள் பிரிக்கப்படுகின்றன, எனவே பயனற்றவையாகின்றன."


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக