வெள்ளி, 28 மே, 2021

கவிதை: II (17) - ஜோஸ் கார்சியா வில்லா (1908-1997)

 

 

கவிதை என்பது முதலில்

ஒரு ஜாலவித்தை போல இருக்க வேண்டும்,

பின்னர் கடல்-கல் இசை போல,

மனதை ஈர்க்கும் ஜ்வலிப்பு போல,

ஒரு பறவை பூக்கும் ரகசியத்தைப்

பொத்தி வைத்திருப்பது போல இருக்க வேண்டும்.

ஒரு மணியொலி போல மெல்லியதாக,

அதே போல நெருப்பையும்

ஆலிங்கனம் செய்ய வேண்டும்.

இணங்குதல்களின் பேரறிவைப் பெற்றிருக்க வேண்டும்.

ஒரு ரோஜாவைப் போல மண்டியிட வேண்டும்.

புறா மற்றும் மான்களின் ஒளிர்தலை

உள்வாங்குவதாக இருக்க வேண்டும்.

தேடுவதை ஒளித்து வைக்கக்கூடியதாக

இருக்க வேண்டும், ஒரு மணமகள் போல.

எல்லாவற்றிற்கும் மேலாக

கவிதையின் முகத்தில் புன்னகைக்கும் கடவுளை

அலைய விடுவதாக இருக்க வேண்டும்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக